பீடு நடை கொண்டபடி பொன்விழவு சூடுகிறான்

blog image

நீடுபுகழ் சேர் கரிய நெடுமாலோ இன்றோடு

பீடுநடை கொண்டபடி பொன்விழவு –சூடுகிறான்

சித்தம் களிகூர சிவசங்கர்ப் பெரியோற்கு

புத்தமுதப் பாட்டுப் புனை

 

கழகத் தலைமையினை காத்திரமாய் முன்னெடுத்து

அழகிற்கழகூட்டும் உத்தமனே – பழகியதாம்

உறவுத் தேர் இழுக்க உரிமை வடம் பிடிக்கும்

நிறைவுக் கரம்கொண்டு நில்

 

சிவதேவி அக்காவும் மதுவந்தி சயந்தவியும்

உவகையொடு உடனிருக்க எந்நாளும் - தவமாக

தமிழ் என்னும் யாகத்தின் தணலாக நீ இருந்து

அமிழ்தொத்த கவிநெய் அளி

 

அன்பகலா மனைவி அழகொழிரும் மக்கள்

இன்முகத்தோடாசி தரும் பெற்றோர் - பின்வந்த

இளவல்கள் புடை சூழ இங்கிதமாய் எந்நாளும்

தளுவும் தமிழ்க்கவிதை தா

 

அரும்பும் நரையுடனே அரைச்சதத்தில் அடிவைத்தும்  

விரும்பும் ‘ டை’ அதனை ஏற்காது – துரும்பாக

மூப்பழகை முறுவலுடன் முந்தி நின்று வரவேற்று

ஆப்புவைத்த உனக்குநிகர் ஆர்

 

பொன்விழவு தாண்டிப் பொலிந்த பெரும் நூற்றாண்டில்

உன்தனக்கு வாழ்த்திசைக்க வேண்டும் - சின்னவனின்

சிரம் தாழ்ந்த வாழ்த்தினை சிந்தை கொண்டேற்க

பரமனை வேண்டினேன் பணிந்து

 

Share :
Tag :
Comments