எதற்கும் அஞ்சேன்

blog image

உண்மைதனை உரைப்பவரை ஊர்த்துரோகி என்று  

உண்டேப்பம் விட்டதனில் உச்சாகம் கொள்வோம்

 

கருத்தொருவன் சொல வந்தால் காதில் கொள்ளோம்

நெருப்பெடுத்து நேர்மை என்றோர் பேரும் வைப்போம்

 

கைக்கூலி பெற்றிருப்பான் கற்பே இல்லான்

திக்கில்லான் தின்ன வழி இல்லான் என்போம்

 

வயிறதனை நிரப்புகிறான் வசதி துய்த்தான்

மயிர் இவனை மழுங்கடிப்போம் மாய்ப்போம் என்போம்

 

ஊர்மானம் பெரிதெமக்கு உயிர்கூடக் கொடுப்போம்

பேர் கூடிப் பெரிய சவால் விட்டெழுந்தோம் நன்றி

 

எண்ணி ஒரு கருத்திட்டேன் ஏற்றகத்தில் கொண்டு

நண்ணி அது சிந்தித்தால் நலங்கொள்வீர் சொன்னேன்

 

விண்ணதிர நீர் முழங்கி வீறு கொண்டு என்ன

என் கருத்தை உரைத்தேன் நான் எதற்கும் அஞ்சேன்

 

Share :
Tag :
Comments